Freitag, 11. Oktober 2013

போளி

உகாதி பண்டிகையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் செய்யப்படும் இனிப்பு பருப்பு போளி. இது சுவையானதோடு சத்தானதும் கூட. தென்தமிழ்நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் இனிப்பு போளி செய்யப்படுகிறது. தேவையானப் பொருட்கள் கடலைப்பருப்பு - 4 கப் அச்சு வெல்லம் - 10 பெரியது ஏலக்காய்த்தூள் - சிறிது மைதா மாவு - 2 1/2 கப் சர்க்கரை – 2 டீ ஸ்பூன் நல்லெண்ணெய் - 200 மிலி பூரணம் செய்முறை கடலைப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து குழைந்து போகாமல் வேகவைத்து எடுக்கவேண்டும். தண்ணீரை வடித்து சிறிது நேரம் உலர விட வேண்டும். பிறகு மிக்ஸியில் கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் கெட்டியாக சேர்த்து அரைக்க வேண்டும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். போளி செய்முறை மைதா மாவில் சிறிது சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து, கடைசியாக சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும். 5 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு பிளாஸ்டிக் தாளில் சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து வைத்து கைகளால் அழுத்தி பரப்பி விடவும். அதன் மேல் கடலைபருப்பு உருண்டையை வைத்து மூடவும். பிறகு அதை ரொட்டி போல் தட்டவும். நல்லெண்ணை தொட்டு செய்தால் கைகளில் ஒட்டாமல் செய்யலாம். தோசைக்கல்லில் வைத்து, சிறிது நல்லெண்ணை விட்டு சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும். சூடான சுவையான பருப்பு போளி ரெடி. இதில் கடலைப்பருப்புடன் தேங்காய்த்துருவலை வறுத்தும் பூரணமாக சேர்த்து செய்யலாம். நல்லெண்ணெய்க்கு பதிலாக சுடும் போது நெய்யும் ஊற்றலாம்.
 


தொதல் செய்வது எப்படி

இன்றைய சமையல் தொகுப்பில் தொதல் செய்வது எப்படி என்று பார்ப்போம் .
இந்த இனிப்பான சிற்றுண்டி பெரியவர்கள்,குழந்தைகள் என அனைவருமே விரும்பி
சாப்பிடுவார் முயற்சித்துப் பாருங்கள். இப்போது தொதல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்கள்
1 சுண்டு சிவப்புப் பச்சை அரிசி
5 தேங்காய்
250 g சர்க்கரை

பூந்தி லட்டு

பூந்தி லட்டு

தேவையான பொருட்கள்:

கடலைமா - 3கப்
சீனி - 5கப்
டைமன் கற்கண்டு - சிறிதளவு
கயு - 20
ஏலக்காய் - 5
நெய் - 5 கரண்டி
தண்ணீர் - 8 கப்
அவித்த கோதுமை மா - 1/2 சுண்டு
உப்பு - சிறிதளவு
பேக்கிங் பவுடர் - சிறிதளவு
மஞ்சள் கலறிங் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் கடலைமாவுடன் அவித்த கோதுமைமாவும் அளவான உப்பும் பேக்கிங்பவுடரும் சிறிது மஞ்சள் நிற கலறிங்கும் சேர்த்து நன்றாக அரித்து எடுக்கவும்.பின்னர் அவற்றுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாக்கரைக்கும் பதத்திற்கு கரைத்து எடுக்கவும்.


      அடுப்பில் தாச்சியை வைத்து நெய்யை விட்டு சூடாக்கிக் கொள்ளவும். பூந்திக் தட்டு அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது நெய் தடவிய பின் நெய் தாச்சிக்கு மேல் பிடித்தவாறு, மாவை சிறிதுசிறிதாக விட்டால் அவை தாச்சியில் உள்ள நெய்யில் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (மாவை விடும்போது நெய் நன்கு சூடாகி, நெருப்பு கணக்கான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடாக இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்)


    தாச்சி நிறைய பூந்தி விழுந்ததும் பூந்தி போடுவதை நிறுத்திவிட்டு, தாச்சியில் உள்ள பூந்திகளை திருப்பிவிட்டு வேகவிடவும்.


     பூந்தி அரைப்பதமாக வெந்ததும் (மென்மையான பதத்தில்) எடுத்து, வடிதட்டில் போட்டு நெய் வடியும் வரை தாச்சியில் பிடித்து வடித்தெடுக்கவும்.


      பூந்தி பொரிக்கும் போதே ஏலக்காயை வறுத்து எடுக்கவும். அத்துடன் கயுவை சிறிது நெய்யில் பொரித்து எடுக்கவும். அத்துடன் 5கப் சீனியை 8கப் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் கலரிங் சேர்த்து மற்றைய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சீனிப்பாணி காச்சவும். பாணியை தண்ணீர்க்குள் விட்டுப் பார்க்கும் போது கரையும் பதம் போய் கம்பிப் பதம் வந்ததும் அதனுள் பொரித்தெடுத்த பூந்தியைபோட்டு ஊறவிடவும்.


     அத்துடன் கயு, ஏலக்காய்பவுடர் என்பவற்றையும் போட்டு பூந்தியில் சேரும் வரை மெதுவாக பூந்தி கரையாமல் கிளறவும். கொஞ்சம் ஆறவைத்து கலவையில் சிறிது சூடு இருக்கும் போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். அவ்வாறு பிடிக்கும் போதே டைமன் கற்கண்டை போட்டுப் பிடித்து பரவலாக அடுக்கி அழகுபடுத்தி பரிமாறலாம்.


   பூந்தியை பொரிப்பதற்கு நெய் விஷேசமானது. இனிப்பு பண்டங்களுக்கு நெய் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். கராம்பு அனேகமானவர்களுக்குப் பிடிக்கும். பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். தேவையாயின் பச்சைக் கற்பூரத்தையும், கராம்பினையும் சேர்த்துக் கொள்ளலாம். அவை வாசனைக்காக சேர்ப்பவை.