Dienstag, 3. Januar 2012

பொன்னடி - அத் திருத்தொண்டன் இதயம்; வண்ணப்
பூவடி - அப் புகழாளன் வதனம்; என்றும்
முன்னடி வைக் கும்வீரன் ஒளிச்சி ரிப்பு
முத்தடி; அம் முத்துக்கும் அழிவா? ஐயோ!
என்னடி! இக் கொடுமையைப்போய் எங்கே சொல்வோம்?
எப்படித்தான் தாங்குவதோ? என்று பெண்கள்
கென்னடி - உன் மறைவறிந்து கலங்கு கின்றார்;
கிளிமார்பில் அடித்தபடி புலம்பு கின்றார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen