Dienstag, 3. Januar 2012

கங்குலிலே முகங்காட்டும் மீன் இனத்தைக்
கண்டுநகை புரிந்ததனால் வெகுண்டாய் போலும்!
திங்களுக்குப் பெருமைதர நினைத்தாய் போலும்!
திட்டமிட்டு நல்லுயிரைப் பறித்து விட்டாய்!

பட்டமரம் வெட்டுண்டால் பரவா யில்லை;
பாதத்தில் தைக்கின்ற முள்வ ளர்க்கும்
நெட்டைமரம் வீழ்ந்திட்டால் கவலை யில்லை;
நிழல்நாடி நிற்போர்க்கு மயக்கம் நல்கும்
கெட்டமரம் - நச்சுமரம் நிலத்தில் வெட்டிக்
கிடந்திட்டால் வருத்தமில்லை; ஆனால் உன்கை
தொட்டமரம் வாழைமரம் - கனிப ழுத்துத்
தொங்கிக்கொண் டிருந்தமரம் - வீழ்த்த லாமா?

Keine Kommentare:

Kommentar veröffentlichen